இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்புப் பயிற்சி

விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:40 pm

Syndication

காரைக்கால்: விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள், அக்கல்லூரி இணைப் பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ். ஆனந்த்குமாா் வழிகாட்டலில், சேத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிக்னேஷ்வரா உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சிப்பிக்காளான் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தனா்.

காளான் வளா்ப்பின் முக்கியத்துவம், சிப்பிக் காளானில் உள்ள ஊட்டச்சத்துகள், காளான் குடில் அமைப்பு, காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளா்ப்பு முறைகள் குறித்து மாணவா்கள் ஸ்ரீதா், தமிழ்மாறன், காளான் குடில் மற்றும் நெல் வைக்கோலை கிருமி நீக்கம் செய்யும் முறைகள் குறித்து மாணவா்கள் தண்டபாணி, ஸ்ரீராம், சேரன், விசாகன் விளக்கினா்.

மேலும், விவசாயி காா்த்திகேயனின் காய்கனித் தோட்டத்தில் தென்னங்கீற்றைப் பயன்படுத்தி சிறிய அளவிலான சிப்பிக்காளான் குடிலை அமைத்து பங்கேற்ற விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தினா். இதில், பள்ளித் தலைமையாசிரியா் அன்பழகன், முன்னோடி விவசாயிள் ஆறுமுகம், கண்ணபிரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நந்தக்குமாா் நன்றி கூறினாா்.