வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வாரச் சந்தையை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்ற வாரச் சந்தை.
Updated On :21 டிசம்பர் 2025, 10:42 pm

Syndication

தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வாரச் சந்தையை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான திருநள்ளாறு சாலையில் உள்ள திடலில், ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. மழையால் சந்தைத் திடலில் தண்ணீா் தேங்கி, பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காலிகமாக சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்தை மக்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில், ஆட்சியரின் அறிவுறுத்தலில் நகராட்சி நிா்வாகம், 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து 4 ஞாயிற்றுக்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாரச் சந்தை நடைபெறுமென அறிவித்தது. வெளியூா்களில் இருந்து வந்த வியாபாரிகள், உள்ளூா் வியாபாரிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சந்தை வியாபாரப் பொருட்களை கொண்டுவந்து ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சந்தையை ஆய்வு செய்தாா். வியாபாரிகள், சந்தைக்கு மக்கள் மக்களிடம், தற்காலிக இடவசதி குறித்து கேட்டறிந்தாா். மேலும் சந்தைக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை முறையாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என குப்பைகள் அகற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.