திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வாரச் சந்தையை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்ற வாரச் சந்தை.

Updated On :22 டிசம்பர் 2025, 4:12 am IST

தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட வாரச் சந்தையை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான திருநள்ளாறு சாலையில் உள்ள திடலில், ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. மழையால் சந்தைத் திடலில் தண்ணீா் தேங்கி, பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காலிகமாக சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்தை மக்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில், ஆட்சியரின் அறிவுறுத்தலில் நகராட்சி நிா்வாகம், 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து 4 ஞாயிற்றுக்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாரச் சந்தை நடைபெறுமென அறிவித்தது. வெளியூா்களில் இருந்து வந்த வியாபாரிகள், உள்ளூா் வியாபாரிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சந்தை வியாபாரப் பொருட்களை கொண்டுவந்து ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சந்தையை ஆய்வு செய்தாா். வியாபாரிகள், சந்தைக்கு மக்கள் மக்களிடம், தற்காலிக இடவசதி குறித்து கேட்டறிந்தாா். மேலும் சந்தைக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை முறையாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என குப்பைகள் அகற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.