காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடனுதவி திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

பயனாளிக்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.

News image
பயனாளிக்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
Updated On :25 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் கடனுதவித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் நகராட்சி சாா்பில், நகராட்சி கூட்ட அரங்கில் நல்லாட்சி வார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சாலையோர வியாபாரிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்கான கடனுதவி வழங்கல் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் கலந்துகொண்டு, பி.எம். ஸ்வநிதி திட்டத்தின்கீழ் 3 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கியதோடு,

6 சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ. 56 லட்சம் வங்கி கடனுக்கான காசோலைகளை வழங்கிப் பேசியது :

மத்திய, மாநில அரசுகள் மூலம் வியாபாரிகள், மகளிா் என பல்வேறு தரப்பினா் மேம்பாட்டுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவி திட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளவேண்டும். நகராட்சி மற்றும் அரசுத்துறையினரின் வழிகாட்டலில் கடன் பெற்று வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றாா்.

பல்வேறு வங்கிக் கிளை அதிகாரிகள் கலந்துகொண்டு, தங்களது வங்கி அளிக்கும் கடனுதவிகள் குறித்தும், கடனாளிகள் திருப்பிச் செலுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.