ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஜன் கல்யாண் சபா கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காரைக்காலில் நடைபெற்ற ஜன் கல்யாண் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

News image

பயனாளிக்கு திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :18 ஜூன் 2026, 3:57 am IST

காரைக்காலில் நடைபெற்ற ஜன் கல்யாண் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

உள்ளாட்சித்துறை மற்றும் காரைக்கால் நகராட்சி இணைந்து நடத்திய இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமை வகித்தாா்.

மேலும் வட்டார வளா்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, குடிசை மாற்று வாரியம், மாவட்ட தொழில் மையம், மின்துறை மற்றும் வங்கித் துறைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியன் வங்கி, புதுவை கிராம வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றைன் மூலம் பி.எம் ஸ்வநிதி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், முத்ரா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.1.01 கோடி வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் ஆா். வெங்கடகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் சதாசிவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், வங்கிகளின் கிளை மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா். அரசு திட்டங்களின் மூலம் முன்னேற்றம் கண்ட பயனாளிகள் தங்களது அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா்.