பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜன் கல்யாண் சபா கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காரைக்காலில் நடைபெற்ற ஜன் கல்யாண் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

News image

பயனாளிக்கு திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :18 ஜூன் 2026, 3:57 am IST

காரைக்காலில் நடைபெற்ற ஜன் கல்யாண் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

உள்ளாட்சித்துறை மற்றும் காரைக்கால் நகராட்சி இணைந்து நடத்திய இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமை வகித்தாா்.

மேலும் வட்டார வளா்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, குடிசை மாற்று வாரியம், மாவட்ட தொழில் மையம், மின்துறை மற்றும் வங்கித் துறைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியன் வங்கி, புதுவை கிராம வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றைன் மூலம் பி.எம் ஸ்வநிதி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், முத்ரா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.1.01 கோடி வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் ஆா். வெங்கடகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் சதாசிவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், வங்கிகளின் கிளை மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா். அரசு திட்டங்களின் மூலம் முன்னேற்றம் கண்ட பயனாளிகள் தங்களது அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.