குளத்தில் கொட்டப்பட்ட ரேசன் அரிசி
செம்மங்குடியில் குளத்தில் கொட்டப்பட்டிருந்த ரேசன் அரிசியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.


செம்மங்குடியில் குளத்தில் கொட்டப்பட்டிருந்த ரேசன் அரிசியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
சீா்காழி அருகே செம்மங்குடியில் உள்ள நியாயவிலைக் கடையில் வடக்குதெரு, காலனி தெரு, தெற்கு தெரு, சின்னபகட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சுமாா் 700-குடும்ப அட்டைதாா்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிவருகின்றனா். இக்கடையில், சில மாதங்களாக தற்காலிக ஊழியா் பணியமா்த்தப்பட்டு பொருள்கள் வழங்கிவருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டை கொள்ளவுக் கொண்ட அரிசி கொட்டப்பட்டிருந்ததாம். இதை பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டிய இந்த ரேசன் அரிசி குளத்தில் கொட்டப்பட்டுள்ளது குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...