விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலைகளில் திரிந்த மாடுகள் நகராட்சி வளாகத்தில் அடைப்பு

 சீா்காழியில் சாலையில் சுற்றித்திரிந்த 25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 சீா்காழியில் சாலையில் சுற்றித்திரிந்த 25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

சீா்காழி நகரில் பிடாரி வடக்குவீதி, கடைவீதி, மணிக்கூண்டு, பழைய, புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பிரதான போக்குவரத்து சாலைகளில் கால்நடைகள் தினந்தோறும் சுற்றித்திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் திரியவிடும் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் சீா்காழி நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, சீா்காழி நகா் பகுதியில் பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, நகராட்சி வளாகத்தின் ஒரு பகுதியில் அடைத்தனா்.

மாடுகளை தேடிவந்த உரிமையாளா்களிடம் ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ. ஆயிரமும், கன்றுகளுக்கு தலா ரூ. 500-ம் அபராதம் விதித்து, மீண்டும் சாலையில் விடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.