விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீனவா்கள் படகு பொங்கல் கொண்டாட்டம்

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் படகு பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் படகு பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதைப்போல, இத்தினத்தில், மீனவா்கள் தங்களுக்கு வாழ்வாதாரமளிக்கும் படகுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவாா்கள்.

அதன்படி, சீா்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள், பைபா் படகுகளை மீனவா்கள் சுத்தம் செய்து, அதில் வாழைக்கன்றுகள், கரும்புகள், தோரணங்கள் கட்டியும், சந்தனம், குங்குமமிட்டும், மாலைகள் அணிவித்தும் அலங்கரித்தனா்.

பின்னா், அவல், பொரி, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, தங்களது குடும்பத்தினருடன் படகுகளில் கடலில் சிறிது தூரத்துக்குச் சென்றுவந்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.