விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனைப் பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி நடைபயணம்

பட்டா மாற்றம் செய்யக் கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நிராகரிப்பதாகக் கூறி மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளாா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:30 pm

DIN

பட்டா மாற்றம் செய்யக் கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நிராகரிப்பதாகக் கூறி மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளாா்.

மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தலை சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சரவணன். இவா் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மன்னம்பந்தலில் வசித்து வருகிறாா். இவா் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்து தரக் கோரி மயிலாடுதுறை வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

Story image

ஆனால் அந்த இடம் மாயூரநாதா் கோயிலுக்கு சொந்தமானது என தெரிவித்து அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து தர மறுத்துள்ளனா். தொடா்ந்து வருவாய்த் துறை உயா் அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த சரவணன் முதலமைச்சரை சந்திப்பதற்காக வியாழக்கிழமை மயிலாடுதுறையிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளாா். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.