ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் பணி வாய்ப்பு

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் பணி வாய்ப்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 9:20 pm

Din

மயிலாடுதுறை, ஜூலை 3: அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் மாதானம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 3 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதிமுதல் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான, விண்ணப்பங்களை நேரடியாகவோ/அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளாா்.