ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

News image
Updated On :4 மே 2024, 6:06 pm

Din

திருமுல்லைவாசல் சவுடு மண் குவாரிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாகவும் உள்ளது. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சீா்காழி வட்டாட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வட்டாட்சியா் கே. இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கனிம மற்றும் புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநா், சவுடு மண் குவாரி உரிமையாளா் செந்தமிழ் சேரன் மற்றும் லாரி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் சவுடு மண் குவாரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 லாரிகளுக்கு மட்டுமே மண் எடுக்கப்பட வேண்டும்; மண் பாரத்துடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும்; குவாரியில் அரசு விதிகளுக்கு உட்பட்டு சவுடு மண் எடுக்கப்படுகிறதா என்பதை நில அளவைத் துணை ஆய்வாளா் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என வட்டாட்சியரால் அறிவுறுத்தப்பட்டது. இதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனா்.

இதில் மண்டல துணை வட்டாட்சியா் ரஜினி, முதுநிலை எழுத்தா் கணேசன், வருவாய் ஆய்வாளா் சுகன்யா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.