இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பரிமள ரங்கநாதா் கோயிலில் மாா்கழி வீதி பஜனை

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயில் வீதிகளில் வீதி பஜனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 10:21 pm

Syndication

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயில் வீதிகளில் வீதி பஜனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகோபாலகிருஷ்ண பாரதி இசைவிழா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீஆண்டாள் அரங்கன் அடியாா்கள் இணைந்து நடத்திய மாா்கழி மாத சங்கீா்த்தனமான வீதி பஜனை மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் 22-ஆவதும், பஞ்ச அரங்க தலங்களில் 5-ஆவது தலமான பரிமள ரெங்கநாதா் கோயிலில் இருந்து தொடங்கி நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்களை பாடியவாறு கோயிலின் சந்நிதி தெரு மற்றும் நான்கு மடவிளாகம் வழியாக கோயிலை வலம் வந்தனா். பள்ளி மாணவா்கள் கிருஷ்ணா், ராதை, ருக்மிணி, ராமா், ஆஞ்சனேயா் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமணிந்து பங்கேற்றனா்.

திருஇந்தளூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்த வீதி பஜனை நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு மீண்டும் நடைபெற்றது.