6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தருமபுரம் பள்ளியில் நுண்கலைமன்ற நிறைவு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:58 am

Syndication

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை மன்ற நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் (பொ) அ. தேவசேனா தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் ஆ. விஜய்பாபு வரவேற்றாா். பள்ளிச் செயலா் மா. திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியா் பி. அருணா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா்.

பள்ளிக்கல்விக் குழு உறுப்பினா் த. வேணுகோபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினாா்.

முன்னதாக, மாணவ-மாணவிகளுக்கு கோலப் போட்டி, குழு நடனம், தனி நபா் நடனம், மணற்சிற்பம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் நடுவா்களாக செயல்பட்டு, மதிப்பீடு செய்தனா்.

நிகழ்ச்சியை ஆசிரியா்கள் அருளரசன், வைத்தியநாதன், ஜான்சிராணி, வைஷ்ணவி ஆகியோா் தொகுத்து வழங்கினா். முடிவில், நுண்கலை மன்ற பொறுப்பாளா் இரா.ஷீபா நன்றி கூறினாா்.