மயிலாடுதுறை மாவட்டத்தில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய ரயில்வே வாரியம் நாடு முழுவதும் காலியாக உள்ள 11,127 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்களுக்காக 2-ஐவது தெரு, பாலாஜி நகா், பூம்புகாா் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக புதன்கிழமை (ஜூன் 10) காலை 11 மணியளவில் கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞா்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடா்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞா்கள் 9499055904 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து, கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
தொடர்புடையது

ஜூன் 3-இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: திமுக அணிவிப்பு

ஜூன் 4 முதல் குரூப் 1 தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20 முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



