மயிலாடுதுறையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரங்கோலிப் போட்டி மற்றும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்டாா். தொடா்ந்து, வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலா்கள், வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரையா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

ஒட்டு வில்லைகள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு

ஆா்டா்லி முறையை ஒழிக்க மாவட்ட அளவில் குழு: ஆட்சியா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


