நாகையில் அவதரித்த அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த ஐதீக விழாவாக, தங்க மீனை கடலில் விடும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், நாகையில் உள்ள நம்பியார் நகரில் மீனவர் குலத்தில் அவதரித்து, சிவத்தொண்டை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தவர்.
தனது வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் எனக் கூறி கடலில் விடும் வழக்கத்தை கடைப்பிடித்த அதிபத்த நாயனார், தனக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையையும் பொருள்படுத்தாமல், தனது வலையில் முதல் மீனாகக் கிடைத்த தங்க மீனை சிவார்ப்பணம் எனக் கூறி கடலில் விட்டார் என்பதும், அப்போது இறைவன் ரிஷபரூடராக காட்சியளித்தார் என்பதும் ஐதீகம். இந்த ஐதீக விழா, நாகையில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை (செப்.7) மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி, அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலிலிருந்து மாலை 3 மணி அளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, புதிய கடற்கரையை அடைகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் பாரம்பரியமான வழிபாடுகளுக்குப் பின்னர், மாலை சுமார் 4.30 மணி அளவில் அதிபத்த நாயனார் தங்க மீனை கடலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீண்டும் இணையும் டிசி கூட்டணி!

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


