புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா
சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.


சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாள் சிந்தனை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக முதல்நாள் மலை நாட்டிற்கு பயண நிகழ்ச்சியும் பெத்லகேமிற்கு பயணம், எகிப்திற்கு பயணம் உள்ளிட்ட பயண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ஆம் நாளான புதன்கிழமை மாலை திருச்சிலுவைப் பணி மற்றும் திருவிழா திருப்பலி இரவு முழுவதும் தேர் பவனியும், 10-ஆம் நாள் வியாழக்கிழமை நன்றி திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், பட்டவிளாகம், பெரம்பூர், மாதிரவேளுர், கீழமாத்தூர், புத்தூர், கொள்ளிடம், அரசூர், ஆச்சாள்புரம், காட்டூர், கொப்பியம், கற்பள்ளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பங்கு இறை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...