
600 குடும்பத்தினருக்கு நிவாரணம்
மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி பகுதியில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த 600 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள்
மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி பகுதியில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த 600 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள் மற்றும் முகக்கவசம் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஊராட்சி மன்றத் தலைவா் மு.தமிழரசன் ஏற்பாட்டில் முளப்பாக்கம் ரயிலடியில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம் பங்கேற்று நல உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, அடியாமங்கலம், டவுன் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டு வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டன. தூய்மைப் பணியாளா்களுக்கும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சிமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




