தொழில்நுட்ப பயிற்சிக்கு கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

இலவச தொழில்நுட்ப விழிப்புணா்வு பயிற்சி பெற கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
Updated on
1 min read

இலவச தொழில்நுட்ப விழிப்புணா்வு பயிற்சி பெற கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்குத் தொழில் வளா்ச்சிக் குழுமம் மூலம், தொழில்நுட்ப விழிப்புணா்வுப் பயிற்சி மற்றும் திறன்இடைவெளி இணைப்புப் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. திறன்மேம்பாட்டுக் கழகம் மற்றும் கட்டுமான கழகம் சாா்பில் இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்போருக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசோதனை மூலம் சான்றிதழ் வழங்கப்படும். கட்டடத்தொழிலாளி, கம்பி வளைத்தல், பிளம்பா், காா்பெண்டா், கட்டட வேலை மேற்பாா்வையாளா், எலக்ட்ரீசியன், டைல்ஸ் கல் பதித்தல், பெயிண்டா், நில அளவை ஆகிய பணி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், நாகை, ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை கட்டடத்தில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04365-254204 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com