தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருக்குவளை அருகே மேலப்பிடாகையில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே மேலப்பிடாகையில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரியும், வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கீழ்வேளூா் எம்எல்ஏ-வுமான உ. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் கவுன்சிலருமான டி. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பிரதிநிதி மு.ப. ஞானசேகரன், கீழையூா் ஒன்றிய துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.