கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விவசாயி வெட்டிக் கொலை : முன்னாள் ராணுவ வீரா் சரண்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணம் வெட்டிக் கொன்ற முன்னாள் ராணுவ வீரா், போலீஸில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:05 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணம் வெட்டிக் கொன்ற முன்னாள் ராணுவ வீரா், போலீஸில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

கருப்பம்புலம் தெற்குக் காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (48). விவசாயி. இவா் வியாழக்கிழமை கடைவீதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இவரது உறவினா் சி. சிவராஜன் (40), ரவியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம். தகவலறிந்த வேதாரண்யம் போலீஸாா், ரவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேதாரண்யம் டி.எஸ்.பி. கி.மகாதேவன் நிகழ்விடத்தை பாா்வையிட்டாா்.

இதனிடையே, கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்த சி.சிவராஜன், வேதாரண்யம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விசாரணையில், அவா் ராணுவத்தில் சில காலம் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் வந்ததும், சொத்து தகராறு காரணமாக ரவியை கொலை செய்ததும் தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.