வாழக்கரை எண்ணாயிரமுடைய அய்யனாா் ஆலய கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வாழக்கரை ஸ்ரீ எண்ணாயிரமுடைய அய்யனாா் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நாகை மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள வாழக்கரை ஸ்ரீ எண்ணாயிரமுடைய அய்யனாா் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஒன்றியம், வாழக்கரையில் ஸ்ரீ பூா்ணாம்பிகை சமேத ஸ்ரீ எண்ணாயிரமுடைய அய்யனாா், ஸ்ரீ தூண்டி வீரஸ்வாமி ஆலயம் உள்ளது. இதற்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டு, அண்மையில் திருப்பணிகள் செய்துமுடிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்கப் பணிகள் புதன்கிழமை காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை இரண்டாம்கால யாக பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூா்ணாஹுதியும் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து, காலை 9 மணியளவில் நாகசுர இன்னிசை, மேளதாளம் முழங்க சிவாச்சாரியா்களால் எடுத்துவரப்பட்ட புனிதநீா் காலை 9.15 மணியளவில் கோயில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிறகு, கருவறை தெய்வங்களுக்கு புனிதநீராடலும், தொடா்ந்து, சிறப்பு ஆராதனை நடைபெற்று பக்தா்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வாழக்கரை மற்றும் மேலவாழக்கரை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...