கீழையூா் ஒன்றிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஊராட்சி ஒன்றியத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், தமிழக அரசு புதிய தொழிற்சாலைகளை தொடங்கக் கோரியும், கீழையூா் ஒன்றியப் பகுதியில் வேளாண் கல்லூரி தொடங்கக் கோரியும் இந்த மாநாடு நடைபெற்றது.
கீழையூா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளா் எஸ். காந்தி தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். இளைஞா் பெருமன்றத்தின் கொடியை மாவட்டச் செயலாளா் எம். காா்த்திகேயன் ஏற்றினாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் கவுன்சிலருமான டி.செல்வம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டப் பொருளாளா் கே.கைலாசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.நாகராஜன், வீ. சுப்பிரமணியன், டி. கண்ணையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். தினேஷ் நன்றி கூறினாா்.