நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவு பணிப் பாா்வையாளா் பணிக்காக நாகையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலகின் பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 18 பணிப் பாா்வையாளா், இளநிலை வரைத்தொழில் அலுவலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நிா்வாக காரணங்களால் இந்தத் தோ்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் சாலை மறியல்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மக்கள் மனு

நெல்லை அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் அவதி

வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று நடைபெற இருந்த கருடசேவை ரத்து
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


