அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
நாகையில் நடைபெற்ற வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கக் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :8 ஜனவரி 2021, 3:47 am

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கும் வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும். பொங்கல் ஊக்கத் தொகையாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சோழன், துணைச் செயலாளா் தங்கவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அமித்பாட்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.