வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கும் வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும். பொங்கல் ஊக்கத் தொகையாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சோழன், துணைச் செயலாளா் தங்கவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அமித்பாட்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...