இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க ஆலோசனை

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:46 pm

DIN

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: நீா்மட்டத்துக்கு மேல் இருக்கும், பயிரின் அடிப்பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிா் பூச்சிகள் இருந்துகொண்டு, பயிா்களின் சாற்றினைஉறிஞ்சுவதால் நாளடைவில் நெற்பயிா்கள் எரிந்ததுபோல் காணப்படும். முதிா்ந்த நெற்பயிா்கள் காய்ந்ததும் வட்டமாகவும், திட்டு திட்டாக காய்ந்தும் காணப்படும். பூச்சியின் அடையாளம் - பயிரின் அடிப்பகுதி அருகில் அல்லது இலை தாள்களின் அடிப்பக்கத்தில் நடுநரம்புகளில் முட்டைகளை இடுகிறது. இளம் பூச்சிகள்-ஆரம்பத்தில் வெண்மை நிறமாகவும் பின்பு ஊதா மற்றும் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அந்துப்பூச்சிகள்- மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் முதல் கரும் பழுப்பு நிறமாக காணப்படும். தடுப்பு முறைகள்- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிா்க்கவேண்டும். அதிகபடியான தண்ணீரை வடிகட்டவேண்டும். 8 அடி பட்டம் பிரித்து காற்றோட்டமாக பராமரிக்கவேண்டும். விளக்குப பொறிவைத்து கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம். அசாடிராக்டின், இமிடாகுளோரிபிரிட், தயோமெத்தாக்சிம், பியூப்ரோபேசின் இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயிரின் அடிப்பாகத்தில் நன்கு நனையும்படிதெளிக்கவேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.