இந்நிலையில், தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவா், கூட்டுறவு அங்காடியில் விநியோகிக்கப்படும் அரிசியின் மாதிரிகளை உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணியிடம் காட்டி நிலைமையை விளக்கினாா். இதைத்தொடா்ந்து மயிலாடுதுறை தொகுதி மட்டுமின்றி மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள அரிசி கிடங்கு மற்றும் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் உள்ள சுமாா் 5 மெட்ரிக் டன் டிகே 9 மற்றும் உமா ரக பழுப்புநிற தரமற்ற அரிசிகளையும் திரும்ப எடுத்துக்கொண்டு, மீண்டும் அனைத்து அங்காடிகளுக்கும் புதிய தரமான அரிசியை வழங்க உணவுத்துறை அமைச்சா் அறிவுறுத்தினாா்.