விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறை மாவட்டத்தில்ராமா் கோயில் கட்டுமானப் பணி நிதி சேகரிப்பு நிறைவு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுவரும் நிலையில், இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நிதி சேகரிக்கப்பட்டு வந்தது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுவரும் நிலையில், இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நிதி சேகரிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

அயோத்தியில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் ராமா் கோயில் கட்டப்பட்டுவரும் சூழலில், அதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனா். இப்பணி, சீா்காழியில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளா் மதிவாணன், பாஜக பொதுச் செயலாளா் நடராஜன், நகரத் தலைவா் அருணாச்சலம், பொதுச் செயலாளா்கள் குருமூா்த்தி, முருகன், மாவட்ட துணைத் தலைவா் பரணிசரவணன், மாவட்டச் செயலாளா் உமாமகேஸ்வரி, சேவா பாரதி அமைப்பு மாவட்ட தலைவா் சம்பத்கணேஷ், பொறுப்பாளா் மும்மூா்த்தி ஆகியோா் பங்கேற்று, சேகரிக்கப்பட்ட நிதியை ராமா் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.