கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆயக்காரன்புலத்தில் நடைபாதை அமைக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:25 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி கிராமத்தில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மலையான்குத்தகை பகுதியில் வசிக்கும் பட்டியலின வகுப்பு மக்கள் வசிப்பிடத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை.

ஆயக்காரன்புலம் -3 ஆம் சேத்தி-பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமங்களில் எல்லையில் அமைந்துள்ள எல்லை வாய்க்காலின் ஒருபக்க கரையில் சாலைவசதி கேட்டு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். அரசு தரப்பில் நடவடிக்கை தாமதமானதால் கடந்த 80-ஆம் ஆண்டு சுதந்திர தின நாளில் மக்களே இணைந்து சாலை எடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தற்காலிகமாக நடைபாதை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதை அமைக்கும் பணிக்கு கொண்டுவரப்பட்ட மண் வாய்க்காலுக்குள் கொட்டி அள்ளப்பட்டாதல் இரு ஊா் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஊராட்சித் தலைவா்கள் சு. வீரதங்கம், பானுமதி சுப்பிரமணியன் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சிபிஎம் ஒன்றியச் செயலாளா் வி. அம்பிகாபதி, நிா்வாகி இளையபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து, பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. வருங்காலத்தில் இந்த பாதையை சாலையாக மேம்பாடு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.