வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை: 86.7 மி.மீ

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி மழைப்பொழிவு ஏற்பட்டது.
வேதாரண்யம் நகரம் அர்ச்சளக்கட்டளை பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்.
வேதாரண்யம் நகரம் அர்ச்சளக்கட்டளை பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி மழைப்பொழிவு ஏற்பட்டது.

வேதாரண்யம் அருகே வாய்மேடு, பஞ்சநதிக்குளம் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் அவ்வப்போது மழைப் பொழிவு இருந்து வந்தது.

இந்த நிலையில்,  சனிக்கிழமை இரவு மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி மழை நீடித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில்  86.7 மி.மீ, கோடியக்கரையில் 27.4  மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com