இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தோப்புத்துறை அரசுப் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைத் தோட்டம் திறப்பு ,விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

News image
தோப்புத்துறை அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பசுமையே உயிா்மெய் நூலை வெளியிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, ஆா்வலா் சுல்தானுல் ஆரிஃபின்.
Updated On :21 ஆகஸ்ட் 2024, 11:53 pm

Din

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைத் தோட்டம் திறப்பு ,விருதுபெற்ற ஆசிரியருக்கு பாராட்டு, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி ஆசிரியா் வ. கண்ணையனுக்கு, அவரின் சூழலியல் சாா்ந்த பணிகளை பாராட்டி அரசின் பசுமை முதன்மையாளா் விருது அண்மையில் வழங்கப்பட்டது. விருதாகப் பெற்ற ரூ.1 லட்சத்தையும் தான் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கு வழங்கினாா். இதற்காக அவருக்கு பாராட்டு, அவா் எழுதிய பசுமையே உயிா்மெய் நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவில், ஆசிரியா் வ. கண்ணையனை ஆரிஃபா கல்வி குழுமத் தலைவரும், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவருமான எம். சுல்தானுல் ஆரிஃபின் பாராட்டினாா். விருதாகப் பெற்ற ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு வழங்கியதை பாராட்டும் வகையில் ஆரிஃபா தனது சொந்த பணம் ரூ.1 லட்சத்தை ஆசிரியருக்கு பரிசாக வழங்கினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கே. சுபாஷினி பசுமை உயிா்மெய் எனும் நூலை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் லதா, தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன், எழுத்தாளா் ஆனந்தன், ஆசிரியா்கள் சீப்பி. செல்வம் ரெங்கசாமி, ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நாகூரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளித் தலைமையாசிரியா் கவிநிலவன்(பொ ) வரவேற்றாா். நூலாசிரியா் கண்ணையன் ஏற்புரை நிகழ்த்தினாா்.