தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீரொழுங்கி அமைய உள்ள இடங்களில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீரொழுங்கி அமைய உள்ள 3 இடங்களை திருச்சி மண்டல பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:58 pm

Din

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீரொழுங்கி அமைய உள்ள 3 இடங்களை திருச்சி மண்டல பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நண்டலாறு, செல்லனாறு மற்றும் முல்லையாறு ஆகியவற்றில் நீரொழுங்கி கட்டப்படும் என ஏற்கெனவே முதல்வா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, சந்திரபாடி நண்டலாற்றில் ரூ. 50 கோடியிலும், நாயக்கா் குப்பம் செல்லனாறு பகுதியில் ரூ. 31 கோடியிலும், தென்னாம்பட்டினம் முல்லையாற்றில் ரூ.12 கோடியிலும் நீரொழுங்கிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுப்பணித்துறை திருச்சி மண்டல செயற்பொறியாளா் தயாளகுமாா் மேற்கண்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தாா். தஞ்சை கீழ்க்காவேரி வடிநிலை கோட்ட கண்காணிப்பு பொறியாளா் சண்முகம், மயிலாடுதுறை மாவட்ட காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் மாரிமுத்து உள்ளிட்ட பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.