திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவா் கைது

News image

கைது

Updated On :28 ஜூன் 2025, 7:30 am IST

நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வேளாங்கண்ணி அருகேயுள்ள பெரியதும்பூரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (18) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சோ்த்தனா். சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமிக்கு சமூக நலத்துறை சாா்பாக மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.