இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

100 நாள் தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:09 pm

Syndication

100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேதாரண்யத்தில், கோட்டாட்சியா் அமித்குப்தா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தாமரைப்புலம் இருளப்பன்: 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களை நெல் உற்பத்தி சாா்ந்த வேளாண் தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள வகை செய்ய வேண்டும்.

தகட்டூா் வீரப்பன்: தகட்டூரில் அமைந்துள்ள நொச்சிக் கோட்டகம் ஏரி கரையை பலப்படுத்தி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைஞாயிறு கமல்ராம்: தலைஞாயிறு பகுதியில் மழை வெள்ளத்தால் குறுவைப் பருவ நெல் சாகுபடி பாதிப்புக்கு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

தங்க. குழந்தைவேலு: தென்னடாா் ஊராட்சியில் கடந்த மாா்ச் பருவத்தில் மேற்கொள்ளப்பட்டு பருவம் தவறிய மழையால் பாதிப்புக்குள்ளான எள் சாகுபடிக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், அதிகாரிகளின் தவறான புள்ளி விவரத்தால் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லை.

ரவி: வண்டுவாஞ்சேரியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பராமரிக்கப்படும் அரசு பண்ணைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கிட வேண்டும்.

முருகதாஸ்: வண்டல் கிராமத்தில் இறால் பண்ணைகளால் பாதிப்புக்குள்ளான குறுவைப் பருவ நெல் சாகுபடிக்கு நிவாரணம் வேண்டும்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள், வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு முள்ளியாறு, மானங்கொண்டானாறுகளில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினா்.