தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

நாகூா் கந்தூரி விழா: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டது பற்றி...

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :28 நவம்பர் 2025, 9:59 pm IST

நாகூா் கந்தூரி விழாவை முன்னிட்டு, சென்னை - மன்னை மற்றும் பெங்களூரு - காரைக்கால் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகூா் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலம் நவ.30 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதற்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் வந்து செல்வா். அவா்களின் வசதிக்காக நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து - மன்னாா்குடி செல்லும் விரைவு ரயில் (16179) மற்றும் நவ.28 முதல் 30 வரை மன்னாா்குடியிலிருந்து - சென்னை எழும்பூா் செல்லும் விரைவு ரயில் (16180) ஆகிய ரயில்களில் கூடுதலாக இரண்டு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று நவ.28 முதல் 30 வரை காரைக்கால் - பெங்களூரு - காரைக்கால் ரயில்களில் (16530-16529) இரண்டு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில் ரத்து: இதுகுறித்து ஆா். வினோத் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், ‘டித்வா புயல் காரணமாக பாம்பன் பகுதியில் காற்று அதிகளவில் வீசி வருகிறது. இதையடுத்து ராமேசுவரம் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சனிக்கிழமை (நவ.29) புறப்படும் ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில் (16104), ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.