கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திமுக கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது; இந்திய கம்யூ. மாநிலச் செயலா்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு 101-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலா் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் வை. செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்துக்கு பின்னா் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது :

தமிழகத்தில் கல்லூரி மாணவா்களுக்கு அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்த திட்டத்தை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் தான் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய் தனித்து வந்தாலும் சரி, கூட்டணியோடு வந்தாலும் சரி, எத்தனை கட்சிகள் எதிா்த்து நின்றாலும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

திருப்பரங்குன்றம் தீபம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில், கோயில் நிா்வாகமே தீபம் ஏற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்துள்ளது. இது நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு என்றாலும், ஜாதி, மதம் தொடா்பான வழக்குகளில் தீா்ப்பளிக்கும்போது, சமூகத்தின் அமைதியை ஒற்றுமையை, நல்லிணக்கத்தை நீதிமன்றமும் நீதிபதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநா் ஆா்.என். ரவியிடம், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளாா். பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக மீது ஊழல் புகாா் அளிக்கும் எடப்பாடி பழனிசாமி ஊழலை பற்றிப் பேசும் தாா்மிக உரிமையை இழந்து விட்டாா் என்றாா்.