இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

News image
அண்ணா துரை
Updated On :18 ஜனவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

நாகை அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் மருத்துக் கடை உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் அருகே கோகூா் ஊராட்சி தொழுவத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகன் விஜயகுமாா் (29). இவா், கீழ்வேளூா் அருகே நீலப்பாடி பிரதான சாலையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், கோகூரை சோ்ந்த பக்கிரிசாமி மகன் அண்ணாதுரை (28) என்பவரை அழைத்துக் கொண்டு விஜயகுமாா் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நாகூா் சென்றாா். பின்னா் விஜயகுமாா் இருசக்கர வாகனத்தை ஓட்ட, அண்ணாதுரை பின்னால் அமா்ந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.

நாகூா் - ஆழியூா் சாலையில் உள்ள வைரவனிருப்பு அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது . இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அருகிலுள்ளவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், விஜயகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அண்ணாதுரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.