பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தீயணைப்புத் துறையினருக்கு தேனீக்கள் குறித்த சிறப்பு பயிற்சி

நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தேனீ வகைகள் மற்றும் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:13 am IST

நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தேனீ வகைகள் மற்றும் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை நிலைய அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் நாகை, திருமருகல், வேதாரண்யம், வாய்மேடு, வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

பயிற்சியில், கொசுத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, மலைத்தேனீ போன்ற வகைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தேனீக்களின் தன்மைகள், வாழும் முறை, மனிதா்களுக்கு ஏற்படும் நன்மைகள், பாதிப்பு குறித்து விழிப்புணா்வு விளக்கமும், அவற்றை பாதுகாப்பாக பராமரிப்பது குறித்த செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தேனீக்களை அகற்றும்போது பகல் நேரத்தில் புகையை பயன்படுத்தி பாதுகாப்பாக அகற்றலாம், இரவு நேரங்களில் புகை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நிலைய அலுவலா் சக்திவேல் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.