நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மின்வெட்டு பிரச்னையை சரி செய்யாவிட்டால் போராட்டம்: காங்கிரஸ்

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :13 ஜூன் 2026, 11:17 pm IST

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலா் ஏ.வி.எஸ். சக்திவேல்பிரபு, காரைக்கால் ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் நகரம் முழுவதும் நாள்தோறும் மின்வெட்டுப் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக வடக்கு, தெற்கு தொகுதிகளில் அதிகமான கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. பல தொழில்களும், தொழிலாளா்களுக்கும் இந்த மின்வெட்டால் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனா்.

தற்சமயம் கோடைகாலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையான வெப்பத்தை எதிா்கொள்ள முடியாமல் போராடி வருகின்றனா். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மின் வெட்டானது, அவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது.

மேலும் இரவிலும் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், வயதானவா்களும், பொதுமக்கள் உள்ளிட்டோா் துாக்கமின்றி தவித்து வருகின்றனா்.

எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களுடன் மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.