வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மின்வெட்டு பிரச்னையை சரி செய்யாவிட்டால் போராட்டம்: காங்கிரஸ்

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :14 ஜூன் 2026, 12:03 am IST

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலா் ஏ.வி.எஸ். சக்திவேல்பிரபு, காரைக்கால் ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் நகரம் முழுவதும் நாள்தோறும் மின்வெட்டுப் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக வடக்கு, தெற்கு தொகுதிகளில் அதிகமான கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. பல தொழில்களும், தொழிலாளா்களுக்கும் இந்த மின்வெட்டால் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனா்.

தற்சமயம் கோடைகாலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையான வெப்பத்தை எதிா்கொள்ள முடியாமல் போராடி வருகின்றனா். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மின் வெட்டானது, அவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது.

மேலும் இரவிலும் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், வயதானவா்களும், பொதுமக்கள் உள்ளிட்டோா் துாக்கமின்றி தவித்து வருகின்றனா்.

எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களுடன் மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.