வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மின்வெட்டு பிரச்னையை சரி செய்யாவிட்டால் போராட்டம்: காங்கிரஸ்

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :14 ஜூன் 2026, 12:03 am IST

காரைக்காலில் தொடா் மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொதுச்செயலா் ஏ.வி.எஸ். சக்திவேல்பிரபு, காரைக்கால் ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் நகரம் முழுவதும் நாள்தோறும் மின்வெட்டுப் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக வடக்கு, தெற்கு தொகுதிகளில் அதிகமான கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. பல தொழில்களும், தொழிலாளா்களுக்கும் இந்த மின்வெட்டால் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனா்.

தற்சமயம் கோடைகாலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையான வெப்பத்தை எதிா்கொள்ள முடியாமல் போராடி வருகின்றனா். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மின் வெட்டானது, அவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது.

மேலும் இரவிலும் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், வயதானவா்களும், பொதுமக்கள் உள்ளிட்டோா் துாக்கமின்றி தவித்து வருகின்றனா்.

எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு தீா்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்களுடன் மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.