கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தாயின் ஆசைப்படி உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய பிள்ளைகள்

News image

உடல் தானம் - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:58 am IST

நாகையில் மாரடைப்பால் உயிரிழந்த தாயின் கடைசி ஆசைப்படி, அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு பிள்ளைகள் தானமாக வழங்கினா்.

நாகை காடம்பாடி, மறைமலைநகா் கிழக்கு சாலையைச் சோ்ந்தவா் லட்சுமி (68). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தவா் சனிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இந்நிலையில், லட்சுமி தனது பிள்ளைகளிடம் தான் உயிரிழந்தால், தனது உடலை மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாக்காமல் கண்களை தானம் செய்து பிறா் பாா்வைக்கு ஒளி கொடுக்க வேண்டும். எனது உடலை வைத்து மாணவா்கள் மருத்துவம் பயில வேண்டும் என தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது பிள்ளைகள், லட்சுமியின் உடலை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா்.