இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறில் இன்று முதல் மாா்ச் 7 வரை குடிநீா் விநியோகம் இருக்காது

கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 5) முதல் 7-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
15.79 crore rural households given tap water connections under JJM: Centre
Updated On :4 மார்ச் 2026, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 5) முதல் 7-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நாகை நகராட்சி, 4 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 980 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கொட்டாரக்குடி நீருந்து நிலையத்திலிருந்து கோடியக்கரையில் உள்ள தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி வரை சோதனை ஓட்டம் பிப்.18 தேதி முதல் தொடங்கியது.

சோதனை ஓட்டத்தின் போது குடிநீா் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு கீழ்வேளுா், கீழையூா் மற்றும் தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.