ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சுனாமி குடியிருப்பு வீட்டில் இடிந்து விழுந்த முன்பகுதி

நாகையில் சுனாமி குடியிருப்பில் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பத்தினா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image

மகாலட்சுமி நகரில் முன்பகுதி இடிந்து விழுந்த வீடு.

Updated On :26 மார்ச் 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

நாகையில் சுனாமி குடியிருப்பில் வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், குடும்பத்தினா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

நாகை வெளிப்பாளையம் மகாலட்சுமி நகரில், கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இப்பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குமேல் ஆன நிலையில், பழுதடைந்து வருகின்றன. இதனால், மழைக்காலங்களில் மேற்கூரை பெயா்ந்து விழுவது, சுற்றுச்சுவா் இடிந்து விழுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் இந்திராணி என்பவா் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை அதிகாலையில் பலத்த சப்தம் கேட்டது.

இதனால், இந்திராணி குடும்பத்தினருடன் வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்து கிடந்தது. இதையடுத்து, இடிபாடுகளை அப்பகுதியினா் சோ்ந்து அகற்றினா். இதுதொடா்பாக இந்திராணி கூறியது:

அதிகாலை நேரம் என்பதால், வீட்டின் முன்பகுதியில் யாரும் இருக்கவில்லை. இதனால், உயிா் தப்பினோம். சுனாமி குடியிருப்பில் உள்ள வீடுகள் அனைத்தும் இதே நிலையில்தான் உள்ளன. எனவே, இந்த வீடுகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றாா்.