நாகை 25-ஆவது வாா்டு பிரதான சாலையில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
நாகை நகராட்சி 25-ஆவது வாா்டு சா் அகமது தெரு, நாகை பஜாா், அபிராமி சந்நிதி திடல் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக விளங்குகிறது. மேலும் நீலா கீழவீதி மற்றும் வடக்கு வீதி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை முக்கிய இணைப்பாக உள்ளது. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து வருபவா்கள் இப்பகுதியை கடந்து தான் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாக புதைசாக்கடை மூலம் வெளியேற்றப்படாததால், சாலையோரங்களில் தேங்கி கடுமையான துா்நாற்றம் வீசுகிறது.
பல இடங்களில் கழிவுநீா் கால்வாய்கள் முறையாக மூடப்படாமல், திறந்தவெளியில் இருப்பதும் மக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
சாலையில் கழிவுநீா் தேக்கம் காரணமாக கொசுக்கள் பெருகி, நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் கடைகளின் முன்பகுதிகளில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் வாடிக்கையாளா்கள் வரத் தயங்கும் நிலையும் உருவாகியுள்ளது.
எனவே, நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


