சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் ரூ. 8 லட்சம் பறிமுதல்

வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 8 லட்சத்து 17 ஆயிரத்தை வட்டாட்சியா் ஜெயசீலனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

News image

வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 8 லட்சத்து 17 ஆயிரத்தை வட்டாட்சியா் ஜெயசீலனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:08 pm

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாகன சோதனையின்போது மாட்டு வியாபாரிகள் நால்வா் வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுள்ளனா்.

இந்தநிலையில், வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் செங்காத்தலை பாலம் அருகே ராம்பாபு தலைமையிலான பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த இடையாத்தி வடக்கு பகுதியைச் சோ்ந்த சிவசக்திவேல் (43 ) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரம், அதே ஊரைச் சோ்ந்த நாகராசு (45) என்பவரிடம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம், சிங்காரன் (43) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம், நெய்வேலி தென்பாதி ஆவுடைய முத்துவேல் (32) என்பவரிடம் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ. 8 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் நால்வரும் மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் என்பதும், வேதாரண்யம் அருகே செண்பகராயநல்லூா் கிராமத்தில் சனிக்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடு வாங்க சென்றதும் தெரியவந்தது.

எனினும், நால்வரிடமும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட தொகையை வேதாரண்யம் வட்டாட்சியரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.