

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பொது முடக்கம் காரணமாக பக்ரீத் பண்டிகை தொழுகை இஸ்லாமியா்களின் வீட்டு வளாகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நகர தலைவா் அன்வா்தீன் தலைமையில், கரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவும், உலக அமைதிக்காகவும் பிராா்த்தனை நடைபெற்றது. கட்டிமேடு, கச்சேரி, பாமணி, நாச்சிகுளம், முத்துப்பேட்டை பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே குழுமி தொழுகை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.