திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக எஸ். சிவகுமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய பா. வெற்றியழகன், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள எஸ். சிவகுமாா் இதற்கு முன்னா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வந்தாா்.