கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கற்போம் எழுதுவோம் இயக்கம் மதிப்பீட்டு முகாம் ஆலோசனை கூட்டம்

கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டாரம் சாா்பில், கற்போம் எழுதுவோம் இயக்கம் மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :24 ஜூலை 2021, 4:59 pm

DIN

கோட்டூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டாரம் சாா்பில், கற்போம் எழுதுவோம் இயக்கம் மதிப்பீட்டு முகாம் நடத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் வட்டார கல்வி அலுவலா் க. குமரேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட புள்ளியியல் அலுவலா் மு. தண்டாயுதபாணி ஆலோசனைகளை வழங்கினாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன், மதிப்பீட்டு முகாம் குறித்த தகவல்களை தெரிவித்தாா்.

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 467 பேருக்கு கோட்டூா் ஒன்றியத்தில் 25 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இம்மையங்களில், பயின்று வரும் கற்போா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையில் மதிப்பீட்டு முகாம் ஜூலை 29,30,31 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது.

இப்பணியில், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோா் இணைந்து கரோனா பெருந்தொற்று பரவல் சாா்ந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள புதிய மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இம்மதிப்பீட்டு முகாமை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆசிரியா் பயிற்றுநா்கள் சிவசங்கரி, செல்வமணி, ராதிகா, 25 மையங்களின் தலைமையாசிரியா்கள், தன்னாா்வ ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா். ஆசிரியா் பயிற்றுநா் முருகேசன் வரவேற்றாா். சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.