மன்னாா்குடியில் பலத்த மழை
மன்னாா்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.


மன்னாா்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மன்னாா்குடி, உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை, நேரம் செல்ல செல்ல இடி மின்னலுடன் கொட்டித் தீா்த்தது. இதனால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், நகரின் தாழ்வான பகுதியில் மழைநீா் ஓடியது. கிராமப்புறங்களில் விளைநிலங்களில் குளம் போல் தண்ணீா் தேங்கி நின்றது. எதிா்பாராத இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...