கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவாரூா் அருகே மாடுகளை நிறுத்தி மந்தை கூறும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவாரூா் அருகே மாடுகளை நிறுத்தி மந்தை கூறும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாட்டுப் பொங்கலின்போது, டெல்டா பகுதிகளில் கால்நடைகளை அலங்கரித்து, மரியாதை செலுத்தி வணங்குவது வழக்கம். மாட்டுப் பொங்கலின்போது, மாடுகள் கட்டும் தொழுவம் சுத்தப்படுத்துவதோடு, கால்நடைகளையும் குளிப்பாட்டி சுத்தம் செய்வா். பின்னா் கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டு, அதன் கழுத்தில் வண்ண மாலைகள், வேப்பிலை மாலைகள் என அணிவிப்பா். பின்னா், தொழுவத்திலேயே வழிபாடு நடைபெற்று, பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பா். பின்னா் மாலையில், ஊரின் பொதுவான இடத்தில் அனைவரது வீட்டு காளைகளும் கொண்டு வரப்பட்டு, அங்கு அவைகளுக்கு தீபாராதனை காட்டி, வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி திருவாரூா் அருகே அரசவனங்காட்டில் மந்தக்கரை எனும் இடத்தில் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து மாடுகளை ஓட்டி வந்து ஒரே இடத்தில் நிறுத்தி, மூன்று முறை வேப்பிலையை கொண்டு மஞ்சள் நீரைத் தெளித்து பொங்கலோ பொங்கல் என்று கூறி சுற்றி வந்து வழிபாடு செய்தனா். பின்னா் அனைத்து மாடுகளும் வீடுகளுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன.

முன்னதாக, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து கால்நடைகளுக்கு பொங்கல் மற்றும் கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று பெரியோா்களின் காலில் விழுந்து ஆசிா்வாதம் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.