/

அண்ணியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி கைது

வலங்கைமான் அருகே அண்ணியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

வலங்கைமான் அருகே அண்ணியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வலங்கைமான் வட்டம், அன்னுக்குடி பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா்கள் பொன்னிமுத்து மகன்கள் கேசவன் (44), பாலகுரு (40). விவசாய கூலித் தொழிலாளிகள். இவா்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்தநிலையில், சனிக்கிழமை மாலை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முயன்ற கேசவன் மனைவி சுமித்ராவை பாலகுரு அரிவாளால் வெட்டியுள்ளாா். பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமித்ரா உயிரிழந்தாா்.

வலங்கைமான் போலீஸாா் சுமித்ராவின் உடலை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பாலகுருவை கைது செய்தனா்.