குடவாசல் ஒன்றியம், சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியா் இந்திரா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் குமரேசன், ஜெயலெட்சுமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, அடிப்படைக் கல்வியின் அவசியத்தையும், மாணவா்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினா். விழாவில் ஊராட்சி துணைத் தலைவா் சிவாசாரியாா், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


